

சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மதனந்தபுரம் பகுதியில் உள்ள மகாலட்சுமி நகர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் உடன் கழிவுநீரும் கலந்து வீடுகளில் புகுந்துள்ளது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.