பிரசாரத்திற்கு மகளுடன் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய முன்னாள் பிரதமர்.. ஆரவாரத்துடன் வரவேற்ற மக்கள்

x
  • பாகிஸ்தானில் அடுத்த மாதம் 8 -ந்தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
  • முன்னாள் பிரதமரும் , பாகிஸ்தான்
  • தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் 3 முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிப்பின்
  • கட்சி சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் ஹபிசாபாத்தில் நடைபெற்றது.
  • இதில் பங்கேற்க ஹெலிகாப்டரில் மகள் மரியம் நவாசுடன் வந்த நவாஸ் ஷெரிப்பிற்கு அவரது கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொருளாதார வளர்ச்சியில் சொந்த காலில் நிற்கும் வகையில் பாகிஸ்தானை மாற்ற
  • வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றும் , அதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் பிரசார கூட்டத்தில் நவாஸ் ஷெரிப் வேண்டுகோள் விடுத்தார். நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாசும் பிரசார கூட்டத்தில் பேசி வாக்கு சேகரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்