23,000 உயிர்களை குடித்தும் அடங்காத போர்.. இஸ்ரேலுக்கு எதிராக எழும் எதிர்ப்புகள்.. லண்டன் அதிர நடந்த சம்பவம்

x

காசா மீதான இஸ்ரேல் போரை நிறுத்தக் கோரி மத்திய லண்டனில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

லண்டன் நகரில் உள்ள இங்கிலாந்து வங்கியிலிருந்து பாராளுமன்றம் வரை மாபெரும் பேரணி நடைபெற்றது... இதில் இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன... கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 135 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 312 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-கித்ரா தெரிவித்தார். மொத்தத்தில், அக்டோபர் 7 முதல் 23 ஆயிரத்து 843 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்