இந்தியாவே திரும்பி பார்த்த வேளாங்கண்ணி கொடியேற்றம்..லட்சக்கணக்கில் படையெடுத்த மக்கள்..

x

வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு பெருவிழா, கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில், ஆண்டு திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அந்தவகையில் ஆண்டு திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. திருவிழாவை முன்னிட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட கொடி, லட்சக்கணக்கானோரின் மரியே வாழ்க கோஷம் விண்ணைப்பிளக்க, கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து பேராலயத்தின் அனைத்து கோபுரங்களிலும் மின் விளக்குகள் ஓளிர, வண்ணமயமான வாண வேடிக்கைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்