நீதிமன்றத்தில் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த நபர்..கோர்ட் வளாகத்தில் இருந்த `பை' - ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிர்ச்சி சம்பவம்

x

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கோவில்பட்டி மந்திதோப்பு எம்.கே.டி நகர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் வயது 45 என்பவர் திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தனக்குத்தானே எரித்துக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் சந்திரசேகர் உடலில் பற்றி எரிந்த தீயை அனைத்து அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்