வரதட்சணை கேட்ட மருமகனின் தம்பி..ஒரே அடியில் நரகத்தை காட்டிய மாமனார்..நெல்லையை அதிரவைத்த சம்பவம்

x

நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், கனகராஜின் சகோதரரான முத்துக்குமார் கோவையில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அனிதா என்பவரை முத்துக்குமார் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெண்ணின் தந்தையான நாராயண பெருமாளிடம், முத்துக்குமாரின் சகோதரர் கனகராஜ் வரதட்சணையாக நகைகள் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். பார்க்கும் இடமெல்லாம் மகளுக்கு எப்பொழுது நகைகள் போடுவாய் எனக்கேட்டு கனகராஜ் தகராறு செய்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு நாராயண பெருமாளின் வீட்டிற்கு சென்று கனகராஜ் சண்டை பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதேபோல், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நாராயாண பெருமாள், கனகராஜை மண்வெட்டியால் அடித்து கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கனகராஜின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதை அடுத்து, தலைமறைவாக உள்ள நாராயண பெருமாளை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்