சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - புதிய தகவல்

x

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் , சாத்தான் குளத்தில் கடை வைத்திருந்த பிரபு என்பவரை மேலும் ஒரு சாட்சியாக சேர்க்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், உத்தரவிற்காக ஆகஸ்ட் 21 ம் தேதி ஒத்தி வைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்த மனு மீதான விசாரணை மாதுரை மாவட்ட நீதிபதி தமிழரசி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, புதிய சாட்சியை சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி உத்தரவிற்காக ஆகஸ்ட் 21 - ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்