மாணவிகளிடம் சில்மிஷம்... கல்லூரி முதல்வரின் செயலால் அதிர்ச்சி

x

சேலத்தில், கல்லூரி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கல்லூரி முதல்வர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது. கொண்டலாம்பட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் கல்லூரியில் முதல்வராக உள்ள பாலாஜி என்பவர், மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மாணவி ஒருவரும் காவல்நிலையத்தில் கல்லூரி முதல்வர் மீது புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து, தலைமறைவாக உள்ள பாலாஜியை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்