அமைச்சர் உதயநிதிக்கு தடை..! - ஈபிஎஸ் திடீர் மனு | Udhayanidhi Stalin | EPS

x

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை நிராகரிக்கக்கூடாது என, ஈ.பி.எஸ். தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொடநாடு கொலை வழக்கில் தொடர்புபடுத்தி பேச, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தடைவிதிக்க கோரி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், ஈ.பி.எஸ். தாக்கல் செய்த அவதூறு வழக்கை நிராகரிக்கக் கோரி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், ஈ.பி.எஸ். தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமைச்சர் உதயநிதிக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கை நிராகாரிக்கக் கூடாது என ஈ.பி.எஸ். தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்