"புஷ்பகிரி மலையை கிறிஸ்தவ மலையாக மாற்றுவோம்" - இந்து முன்னணியினர் சொன்ன அதிர்ச்சி தகவல்

x

சென்னிமலை புஷ்பகிரி மலையை, கல்வாரி மலையாக மாற்றுவோம் என கிறிஸ்துவ அமைப்பினர் கூறியதை கண்டித்து சென்னிமலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து முண்ணனியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிறிஸ்துவ முன்னணியினர், புஷ்ப கிரி மலையை கல்வாரி மலையாக மாற்றுவோம் என பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சென்னிமலை பேருந்து நிறுத்தம் முன்பாக இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், சென்னிமலையை கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்றவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இல்லை என்றால், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்