#JUSTIN || திடீரென நுரை நுரையாய் தள்ளும் ஆறு.. அச்சத்தில் மக்கள்

x
  • கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றின் வழியாக இன்று ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
  • ஒசூர் கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும், இதில் தற்போது அணையில் 24.60 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. தொடர் மழை காரணமாக ஒசூர் கெலவரப்பள்ளி
  • அணைக்கு நேற்று 562 கன அடி நீர்
  • வரத்தாக இருந்த நிலையில் இன்று அணைக்கு 2270 கன அடி நீர் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 2240 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
  • இதனால் தென்பெண்ணை ஆற்றின் படுகைகளில் இரசாயன நுரைகள் குவியல் குவியலாக பொங்கி செல்கிறது. நேற்றம் இன்றும் ஆற்று படுகைகளில் ரசாயன நுரைகள் பொங்கி செல்வதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்