#Justin|| சென்னை-திருச்சி NH-ல் கோர விபத்து.. அமர்ந்த நிலையிலே பிரிந்த 3 உயிர்கள்

x

மதுராந்தகம் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அய்யனார் கோவில் என்ற இடத்தில் ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் இன்று காலை ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் காரில் பயணம் செய்த மூன்று ஆண்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர் இதனை அடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த மதுராந்தகம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இவர்கள் யார் எங்கிருந்து வருகிறார்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் எங்கு செல்கிறார்கள் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்