மாடு முட்டியதில் பெண் தூய்மை பணியாளருக்கு நேர்ந்த கொடூரம் ஒசூர் அருகே பரபரப்பு

x

ஒசூர் அருகே காளை மாடு முட்டி பெண் தூய்மை பணியாளர் படுகாயம் அடைந்துள்ளார். கெலமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருபவர் சிவம்மா. இந்நிலையில் சிவம்மா வழக்கம்போல் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், கோயிலுக்கு சொந்தமான காளை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசியுள்ளது. இதில், படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் கெலமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்