"எண்ணி பாத்த ஒன்னு கூட இருக்கே" நீட் பாஸ் ஆகாமலேயே காலேஜில் படித்த மாணவி..! - அதிர்ந்த அதிகாரிகள்

கேரளாவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமலே மருத்துவ கல்லூரியின் வருகை பதிவேட்டில் பெயர் சேர்க்கப்பட்டு 4 நாட்களாக மாணவி ஒருவர் கல்லூரிக்கு வந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x

கேரளா மாநிலத்தில் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி முதல் அனைத்து மருத்துவக்கல்லூரியிலும் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கின. இந்நிலையில், கோழிக்கோடு அரசு மருத்துவமனை கல்லூரியில் மாணவி ஒருவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமலேயே, வகுப்பறை பதிவேட்டில் பெயர் பதிவுடன் 4 நாட்களாக கல்லூரிக்கு வந்து சென்றுள்ளார். இந்த சம்பவம் கல்லூரியின் வருகை பதிவேட்டை அதிகாரிகள் சரிபார்க்கும் போது, ஒதுக்கப்பட்ட மாணவியின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்த போது கண்டுபிடித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் கல்லூரி முதல்வரிடம் தகவல் தெரிவித்து போலீசில் புகாரளித்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து விரைந்து விசாரணை நடத்த கேரளா சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், மருத்துவ துறை கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்