பத்திரகாளியம்மன் கோயிலுக்கு சமஸ்தானம் பூட்டு.. சாலைமறியலில் ஈடுபட்ட பெண்கள்

x

ராமநாதபுரம் அருகே, கோயிலை திறந்து, வழிபாடு நடத்த அனுமதிக்கக்கோரி, பெண்காள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாலவனத்தம் கிராமத்தில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பத்ரகாளியம்மன் கோயிலில் அந்த பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினர் வழிபட்டு வந்தனர்.

இந்த நிலையில் ராமநாதபுரம் சமஸ்தானத்தை சேர்ந்த நபர்கள், கோயிலை பூட்டிவிட்டு சென்றனர்.

இந்த நிலையில் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது, பெண்கள் சில சாமி வந்து ஆடினர். எனினும் பேச்சுவார்த்தையில், தீர்வு காணப்படாததால், பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர்.

அப்போது, கோயில் திறப்பு விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்