"செந்தில் பாலாஜியை நள்ளிரவில் கைது செய்தது ஏன்?" - ஆவேசத்தில் உடைத்து பேசிய கே.எஸ். அழகிரி

x

திராவிட அரசியலை பாஜக வேரறுக்க நினைக்கிறது என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்ச்சித்தார்.

செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கைகளை கண்டித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், கோவையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இதில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, டி.ஆர். பாலு, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய கே.எஸ். அழகிரி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நடத்திய சோதனையில் என்ன ஆவணம் கிடைத்தது?, நள்ளிரவில் செந்தில் பாலாஜியை கைது செய்தது ஏன் என கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்