கட்சியில் என் பங்கு என்ன? ராகுல்காந்தி அதிரடி அறிவிப்பு

x

காங்கிரஸ் கட்சியில் தனது பங்களிப்பு குறித்து கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முடிவு செய்வார் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஆந்திரா மாநிலம் அதோனி பகுதியில் பாரத் ஜோடோ யாத்திரையில் இருக்கும் ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது காங்கிரசின் புதிய தலைவர் குறித்தும், ராகுல்காந்தியின் பங்களிப்பு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல்காந்தி, கட்சியில் தனது பங்களிப்பு குறித்து புதிய தலைவராக தேர்வாகியுள்ள மல்லிகார்ஜூன கார்கேவிடம் தான் கேட்க வேண்டும் என்றார். கட்சியின் இறுதி முடிவை காங்கிரஸ் தலைவர் எடுப்பார் என்ற ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே புரிதல் கொண்ட மூத்த தலைவர் என்பதால் தனது ஆலோசனை தேவைப்படாது என்றார். மேலும், காங்கிரஸ் தலைவர் தேர்தல் வெளிப்படை தன்மையுடன் நடைபெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்