பழி தீர்க்க... பாமக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 6 பேர் கைது

x

சென்னை வண்ணாரப்பேட்டையில் பாமக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், ஷரீஷ், ஆகாஷ், ஆனந்த்,,சாய்காந்த, அருண், கணேஷ் ஆகிய ஆறுபேரை கைது செய்தனர்.

விசாரணையில் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பாமக பிரமுகர் மகன் துஷாலுக்கும் இவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டதால் தாக்க துரத்தியது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டனர்


Next Story

மேலும் செய்திகள்