"வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா"... திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள் - கடற்கரையில் விளையாடி மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். அதிகாலை முதலே கடலில் புனித நீராடி, பின்பு நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் நாழிக்கிணறு, வள்ளிக்குகை, முடி காணிக்கை செலுத்தும் இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடல் அலையில் குளித்து விளையாடி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்