மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... சிக்கிய குற்றவாளியை காப்பாற்ற முயற்சி?.. பொதுமக்கள் தர்ணா - திண்டிவனத்தில் பரபரப்பு

x
    • திண்டிவனம் அருகே பாலியல் புகாருக்கு உள்ளான தலைமை ஆசிரியரை காப்பாற்ற முயல்வதாக குற்றம் சாட்டி, காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
  • கைது செய்யப்பட்ட விட்டலாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் மயங்கி விழுந்த‌தால், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
  • இந்நிலையில், தலைமை ஆசிரியரை காப்பாற்ற முயல்வதாக குற்றம் சாட்டி காவல்நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
  • இதையடுத்து காவல் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உடல்நிலை சரியானதும் கைது செய்யப்படுவார் என கூறினர். அதை ஏற்க மறுத்த பொதுமக்கள் காவல்நிலையம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
  • அவர்களிடம் போலீசார் மீண்டும் உறுதி அளித்த‌தால், கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்