"வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்"... 12-ஆம் தேதி மனு அளிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்

x

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை பொது மக்கள் நம்பி அச்சப்பட தேவையில்லை என்று, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். வலை தளத்தில் தவறான வதந்திகள் பரப்புபவர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே மீண்டும் பிரச்சனைகள் ஏற்படுத்தும் வகையில் பொது மக்களிடம் தவறான தகவல்கள் பரப்பக் கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பை சார்ந்த நிர்வாகிகள் மட்டும் வரும் 12-ஆம் தேதி தங்களுடைய கோரிக்கைக்காக வந்து மனு அளிக்கலாம் என்றும், கூட்டமாக வருவதை தவிர்க்க வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்