திருத்துறைப்பூண்டி டூ ராமேஸ்வரம் தனியாக ரயிலில் சென்ற 8 வயது சிறுவன் - ராமேஸ்வரத்தில் திகைத்து நின்ற காட்சிகள்

x

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் செய்வதறியாது திகைத்து நின்ற சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தின் நடைமேடையில் சுற்றித்திரிந்த சிறுவனிடம், ரயில்வே போலீசார் விசாரித்துள்ளனர்.

விசாரணையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ரலீஸ் என்ற 8 வயது சிறுவன் என்பதும், ரயில் பயணம் செய்ய விரும்பி திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் நின்ற ராமேஸ்வரம் ரயிலில் ஏறியதும் தெரிய வந்தது.

தொடர்ந்து சிறுவனின் தந்தையை போலீசார் தொடர்பு கொண்டு வரவழைத்த நிலையில், சிறுவனை தந்தையிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்