வரட்டா மாமே டூர்.. ஆன்லைன் செயலியில் பைக் விற்பனை.. கஸ்டமராக வந்து நூதனமாக பைக்கை திருடிய நபர்

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, ஆன்லைன் செயலியில் விற்பனை செய்ய முயன்ற இருசக்கர வாகனத்தை, விலைக்கு வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

பல்லடத்தை அடுத்த வெங்கிட்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை விற்க, ஓஎல்எக் செயலியில் விளம்பரப்படுத்தியுள்ளார்.

அந்த வாகனத்தை பொள்ளாச்சியை சேர்ந்த நபர் ஒருவர், அருண்குமாரை தொடர்புகொண்டு, இருசக்கர வாகனத்தை வாங்குவதாகக் கூறியுள்ளார்.

அதன்படி பல்லடத்திற்கு வந்த நபர், அருண்குமாரின் இருசக்கர வாகனத்தை வாங்குவதுபோல் நடித்து பரிசோதனை செய்துள்ளார்.

பின்னர், இருசக்கர வாகனத்தில் சிறிது தூரம் சென்று வருவதாகக் கூறிய நபர், நீண்ட நேரமாகியும் வராததால், அருண்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

இதுதொடர்பான புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்