போதையில் பானிபூரி சாப்பிட்டு விட்டு வடமாநில கடைக்காரரை தாக்கிய கும்பல் - வெளியான சிசிடிவி காட்சி
- திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பானிபூரி கடையில் சாப்பிட்டு விட்டு 4 பேர் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பல்லடம் பேருந்து நிலையம் அருகே வடமாநிலத்தை சேர்ந்த பப்பு என்பவர் பானிபூரி கடை நடத்தி வருகிறார். அங்கு குடிபோதையில் வந்த
- பாலகிருஷ்ணன். சத்திபிரனவ், சபிக்ஷன், சாந்தனு என்ற 4 பேர் பானி பூரி சாப்பிட்டு விட்டு
- தகராறில் ஈடுபட்டுள்ளனர். பானிபூரி கடைக்காரர் பப்புவை 4 பேரும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
- அப்போது ரோந்து பணியில் இருந்த பல்லடம் காவல் ஆய்வாளர் தகராறில் ஈடுபட்ட 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார். இந்நிலையில் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
Next Story