பாரில் குடித்து கொண்டு இருந்த இளைஞர்... திடீரென சரமாரியாக குத்தி கொன்ற மர்ம நபர் - தேடும் வேட்டையில் போலீஸ்

x

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மதுபான கூடத்தில் இளைஞர் ஒருவர், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே புலிகுத்தி பகுதியை சேர்ந்த முருகேஸ்வரன் என்பவர், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள மதுபான கூடத்தில் மது அருந்தியுள்ளார்.

அங்கு, அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், முருகேஸ்வரனை கத்தியால் கழுத்தில் குத்தி கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விசாரணையில், முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், அடையாளம் தெரியாத கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்