ஒன்றாய் வாழ மறுத்த மனைவி..கழுத்தறுத்து கொன்ற செய்த கணவர் - கைது செய்ய வந்த SI-க்கு நேர்ந்த சோகம்

x

கள்ளக்குறிச்சி அருகே மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவர், உறவினர்களையும் சரமாரியாக தாக்கியதை தொடர்ந்து, பிடிக்க சென்ற உதவி ஆய்வாளரையும் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...பழைய பல்லகச்சேரியை சேர்ந்த முருகன் - விஜயா தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் முருகன் தனது மனைவியை தன்னுடன் வருமாறு அழைப்பதற்காக அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது முருகன் உடன் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்த விஜயா, தான் மறுமணம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயாவின் கழுத்து, கை உட்பட 7 இடங்களில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைத் தொடர்ந்து தடுக்க வந்த விஜயாவின் உறவினர்களையும் முருகன் கத்தியால் தாக்கியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உதவி ஆய்வாளர் சத்திய சீலன், முருகனை பிடிக்க முயன்ற நிலையில் அவரையும் கத்தியால் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்