திடீரென சாலையில் கொட்டிய அருவி.. வண்டியை நிறுத்தி குளியல் போட்ட நபர்

x

திண்டுக்கல் மாவட்டம் ந‌த்த‌த்தில் திடீரென மழை பெய்த‌தால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், நான்கு வழிச்சாலையின் மேம்பாலத்தில் இருந்து, அருவியைப் போன்று மழைநீர் கொட்டியது. அதைப் பார்த்த வாகன ஓட்டி ஒருவர், அருவியில் குளிப்பதைப் போன்று, ஆனந்த குளியல் போட்டார். அப்போது, மழையில் நனையாமல் இருக்க பாலத்திற்கு அடியில் நின்று கொண்டிருந்தவர்கள் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்