பேருந்துக்குள் அருவியாய் கொட்டிய மழை.. குடை பிடித்தபடி பயணித்த மக்கள்

x

வந்தவாசியில் அரசு பேருந்து ஒழுகியதால், பயணி ஒருவர் குடை பிடித்தபடியே பயணித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது அப்பகுதியில் சென்ற அரசு பேருந்து ஓழுகியதால், பேருந்தில் இருந்த பயணிகள் அவதியடைந்தனர். அப்போது பயணி ஒருவர் குடைபிடித்தபடியே பயணித்தார். பின்னர் இதுகுறித்து அதிருப்தி தெரிவித்த பயணிகள், பேருந்துகள் ஒழுகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்