லோடு வேனை நிறுத்தி உள்ளே பார்த்த போலீசார்... சிக்கிய 1,300 கிலோ குட்கா பொருட்கள்

x

காஞ்சிபுரம் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் 12 லம்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த லோடு வேனை நிறுத்தி சோதனையிட்டத்தில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆயிரத்து 300 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுநரான மகேஷ்குமாரை கைது செய்தனர். மேலும், உரிமையாளரான குன்றத்தூரை சேர்ந்த பால்ராஜை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்