வீட்டிலேயே உயிரிழந்த நபர்.. 3 மாதமாக கட்டிலிலே கிடந்த சடலம்.. காட்டி கொடுத்த மாடு - ஓசூரில் பயங்கரம்

x

ஓசூரில் குடும்பத்தினரை பிரிந்து தனியாக வசித்து வந்த பேன்சி கடை உரிமையாளர் இறந்து 3 மாதங்களாக, கட்டிலில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஓசூர் நியூ டெம்பிள்லேண்ட் ஹட்கோ பகுதியை சேர்ந்த அசோக்குமார், ஓசூர் நேதாஜி சாலையில் பேன்சி கடை நடத்தி வந்துள்ளார். குடும்ப பிரச்சினையால் தொழிலை இழந்த அவர், குடும்பத்தினரை பிரிந்து, மனரீதியாக பாதிக்கப்பட்டு தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருடைய மனைவியும், மகளும் இவரை விட்டு பிரிந்து பெங்களூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அசோக்குமார் 3 மாதங்களுக்கு முன்பு வீட்டிலே உயிரிழந்துள்ளார். அவருடைய வீட்டு வளாகத்தில் மாடு ஒன்று நுழைந்ததால், அதைப் பிடிப்பதற்கு உரிமையாளர் சென்றபோது, துர்நாற்றம் வீசியதால் ஓசூர் நகர போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரித்தபோது, வீட்டில் இறந்து கிடந்தது அசோக்குமார் என்பது தெரியவந்தது. அவருடைய உறவினர்களுக்குத் தகவல் கொடுத்த போலீசார், உடலைக் கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்