"கட்சி துவங்கி 34 ஆண்டுகளாகியும் ஆட்சிக்கு வரமுடியவில்லை" - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்

x

செல்போன் அரசியல் போதும் என்றும், நேரடியாக மக்கள் களத்திற்கு சென்று கட்சியை வலுப்படுத்துங்கள் என்று தொண்டர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கட்டளையிட்டார். திருப்பத்தூர் மாவட்டம், கிரிசமுத்திரம் பகுதியில் நடைபெற்ற பாமக நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துக் கொண்டு தொண்டர்கள் மத்தியில் பேசினார். தமிழ்நாட்டை ஆள அனைத்து தகுதிகளும் இருந்தும் கட்சி தொடங்கி 34 ஆண்டுகள் ஆகியும் பாமக ஆட்சி அமைக்க முடியவில்லை என்பது மிகப்பெரிய வருத்தமாக உள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்