கோயிலுக்குள் கணவன் நிகழ்த்திய பயங்கரம்.. சாமி சிலை முன் பிரிந்த மனைவி உயிர்

x

ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கண்ணன்.

இவருக்கு சுமதி என்பவருடன் திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், வேறோரு பெண்ணுடன் கண்ணன் தகாத உறவில் இருந்ததாகவும், இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, ஆலங்குளம் காவல்நிலையம் பின்புறம் உள்ள முத்தாரம்மன் கோயிலுக்கு சென்ற சுமதியிடம், அவரது கணவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, அருகில் இருந்த இரும்புக் கம்பியால் சுமதியை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுமதியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதன்பின்னர் மனைவியை கொலை செய்த கண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்