"நாங்க எப்படி தான் போறது" - மக்களை திணறவிட்ட தரைப்பாலம்

x

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வத்திராயிருப்பு, கான்சாபுரம், ராமச்சந்திராபுரம், கூமாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால், கல்லணை ஆற்றுப்பாலம், லிங்கம் கோயில் ஓடை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் ராமச்சந்திரபுரம் முதல் புதூர் குன்னூர் செல்லும் சாலையில், தரைப்பாலம் மூழ்கியதால் பள்ளி மாணவர்கள் சிரமம் அடைந்தனர். மேலும் நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்