சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகருடன் ஈபிஎஸ் தரப்பினர் இன்று சந்திப்பு

x

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகருடன் ஈபிஎஸ் தரப்பினர் இன்று சந்திப்பு


சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர், சட்டப்பேரவை தலைவரை இன்று சந்திக்கவுள்ளனர்.


இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து, சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில்,

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, சட்டம் ஒழுங்கு, பொங்கல் பரிசுதொகுப்பு வழங்குவதில் உள்ள குளறுபடிகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அதிமுக உறுப்பினர்கள் பேச அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயக்குமார் நியமிக்க இந்த கூட்டத்தொடரின் போது மீண்டும் வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக இன்று சபாநாயகரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்