மாமூல் தர மறுத்த திமுக நிர்வாகி - ஓட ஓட விரட்டி வெட்டிய ரவுடிகள்.. - குலைநடுங்க வைத்த சம்பவம்

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் அருகே திமுக நிர்வாகியை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை அருகே ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி. இவர் ஆதலூர் ஊராட்சியில் திமுக அவைத் தலைவராக இருந்து வரும் நிலையில், வீடு கட்டுவதற்கு தேவையான மணல் மற்றும் ஜல்லி கற்களை விற்பனை செய்தும் வந்திருக்கிறார். இந்நிலையில், தனது வீட்டின் அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்த சக்கரபாணியை, திடீரென சூழ்ந்த கும்பல், ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சக்கரபாணியை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாடம்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த கும்பல், சக்கரபாணியிடம் மாமூல் கேட்டதாகவும், தர மறுத்ததால் அரிவாளால் தாக்கி சென்றதாகவும் கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்