கொடூரத்தில் முடிந்த பஸ் தகராறு... கட்டிட மேஸ்திரியின் மர்ம உறுப்பை அறுத்து வெறிச்செயல்...

x

திருப்பூரில், அரசுப் பேருந்தில் ஏற்பட்ட தகராறில், கட்டிட மேஸ்திரியின் மர்ம உறுப்பை அறுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண். இவர், திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் தங்கி, கட்டிட மேஸ்திரியாக, வேலை செய்து வருகிறார். சொந்த ஊர் செல்வதற்காக திருப்பூரில் இருந்து அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது, அருணுக்கும், அருகில் அமர்ந்திருந்த பயணி ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட பேருந்து நடத்துனர், கொடுவாய் பகுதி அருகே இருவரையும் பேருந்தில் இருந்து இறக்கியுள்ளார். பின்னர், மீண்டும் தகராறு ஏற்படவே, அருணின் ஆணுறுப்பு அறுபட்ட நிலையில் சாலையோரத்தில் கிடந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார்,

அருணை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் முதற்கட்ட விசாரணையில், அருணிடமிருந்து செல்போன் மற்றும் 4 ஆயிரம் ரூபாயை, மர்மநபர் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்