திடீரென மாயமான VAO...3 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை - திண்டுக்கலில் பரபரப்பு சம்பவம்

x

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திடீரென்று மாயமான கிராம நிர்வாக அலுவலரை போலீசார் தேடி வருகின்றனர். வி.புதுக்கோட்டை ஊராட்சியில் விஏஓவாக பணியாற்றி வருபவர் மகேஸ்வரன். இவர், கொசவபட்டியில் புதிதாக கட்டி வரும் வீட்டை பார்ப்பதற்காக கடந்த 20ஆம் தேதி இரவு சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பாத‌தாலும், செல்போன் அழைப்புகளையும் எடுக்காத‌தாலும், அவரது மனைவி சங்மா மற்றும் உறவினர்கள் சென்று பார்த்துள்ளனர். மகேஸ்வரனின் இருசக்கர வாகனம் மட்டும், இருந்துள்ளது. 3 நாட்களாக தேடியும், எந்த தகவலும் கிடைக்காத‌தால், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விஏஓ மகேஸ்வரனை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்