எஸ்.ஐ வீட்டில் 30 சவரன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை - விருதுநகரில் பரபரப்பு

x
  • விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் சார்பு ஆய்வாளர் வீட்டில் 30 சவரன் நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
  • மொட்டமலை காவல் படை பிரிவில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரும் கோமதி விநாயக கண்ணன், தனது குடும்பத்தினருடன் சொந்த வேலையின் காரணமாக வெளியூர் சென்றிருந்தார்.
  • அப்போது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 30 சவரன் நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
  • இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களுடன் வந்த போலீசார், கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொள்ளையர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்