"ரெங்கா... ரெங்கா..." அரங்கநாதர் ஆலய பங்குனி தேரோட்டம் - பக்தி கோஷமிட்டவாறு தேரை இழுத்த பக்தர்கள்

x

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலய பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நம்பெருமாள், ரத்தின அபயஹஸ்தம், முத்து பாண்டியன்கொண்டை, மார்பில் நீலநாயகம் அணிந்து, கோ ரதத்திற்கு வந்தடைந்தார். அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

நான்கு சித்திரை வீதிகள் வழியாக வலம் வந்து, தேர் நிலையை அடைந்தது. பெருந்திரளான பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்