“அதே எஸ்.ஐ. வந்தே ஆகணும்“.. “போலீஸ் ஸ்டேஷனே இருக்க கூடாது“ - போராட்டத்தில் குதித்த கிராமம்

x

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே எஸ்.ஐ. மாற்றப்பட்டதைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அ.முக்குளம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக வீரணன் என்பவரும், காவலராக சிலம்பரசன் என்பவரும் பணியாற்றி உள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது விருதுநகர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். மேலும், சிலரின் தூண்டுதலால் அவர்கள் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள கிராம மக்கள், இவர்கள் அப்பகுதிக்கு வந்த பிறகு குற்றச்சம்பவங்கள் குறைந்ததாகவும் கூறி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்