மக்களை இழுத்து சென்ற போலீஸ் பரபரப்பு காட்சிகள் | Poonamallee

x

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களை போலீசார் இழுத்து சென்று வாகனத்தில் ஏற்றியதால் பரபரப்பானது. சிக்கராயபுரம் அருகே மூகாம்பிகை நகர் பகுதியில் பொது மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த பாதையை, தனிநபர் ஒருவர் தகடுகள் வைத்து மூடியதாக கூறப்படுகிறது. அந்த பாதை தனக்கு சொந்தமான பாதை என கூறி மூடியதை எதிர்த்து பொது மக்கள் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை இழுத்து சென்று வாகனத்தில் ஏற்றிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்