பொறி வைத்து காத்திருந்த மக்கள் -வழிய வந்து மாட்டிய திருடன் -துணியை உருவி மரத்தில் கட்டிவைத்து தண்டனை

x

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, வீட்டில் திருட முயற்சித்த இளைஞரை, போதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


சாத்தான்குளம் அருகே நரையன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த மணிகண்டன், அப்பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

4 நாட்களுக்கு முன்பு திருநாமக்கனி என்பவரது வீட்டில் புகுந்த மணிகண்டன், அங்கிருந்த செல்போன் ஒன்றை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதில் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், அடுத்த முறை திருட வந்தால், மர்மநபரை பிடிக்க கவனமுடன் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், மதில் ஏறி குதித்து வீட்டில் திருட முயன்ற மணிகண்டனை, அப்பகுதி மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்