பள்ளி மாணவனை சிறுநீர் கழிக்க விடாமல் 3 மணி நேரம் நிறுத்திவைத்த ஆசிரியர்

x

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், பள்ளி மாணவனை சிறுநீர் கழிக்க அனுமதிக்காமல், 3 மணி நேரம் நிறுத்தி வைத்த ஆசிரியர் மீது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டி என்பவரது 7 வயது மகன், அதே பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் துவக்கப்பள்ளியில் படித்து வருகிறார். பள்ளியில் மாணவர்களுடன் ஏற்பட்ட சண்டையில், அந்த மாணவனை ஆசிரியர் கண்டித்துள்ளார்.

பள்ளி இடைவேளையின்போது, மாணவ மாணவிகள் அனைவரும் வெளியே சென்ற நிலையில், அந்த மாணவனை மட்டும் ஆசிரியர் அனுப்பவில்லை என கூறப்படுகிறது.

பின்னர் மதியம் உணவு இடைவேளைக்கு வீட்டிற்கு வந்த மாணவன், தனக்கு சிறுநீர் கழிக்கும் இடத்தில் வலி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளான்.

பெற்றோர் அவனிடம் விசாரிக்கும் போது, ஆசிரியர் சிறுநீர் கழிக்க அனுமதிக்கவில்லை எனக் கூறி அழுதுள்ளான்.

இதுதொடர்பாக மாணவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தவுடன், மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவனை அனுமதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்