வீட்டை எதிர்த்து திருமணம்.. நீதிமன்றத்தில் தஞ்சமடைந்த ஜோடி - நீதிபதி அதிரடி உத்தரவு

x
  • திருப்பூர் மாவட்டத்தில் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தில் தஞ்சமடைந்த விவகாரத்தில், காதலர்களின் பதிவு திருமணம் செல்லும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
  • பல்லடம் அருகே அகிலாண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு. இவரும் அதே பகுதியை சேர்ந்த தர்ஷினி என்பவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
  • இதையறிந்த பெண்ணின் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணை சிறைப்பிடித்தாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில், காதலியை அழைத்து சென்று பதிவு திருமணம் செய்த சந்துரு பாதுகாப்பு கோரி பல்லடம் நீதிமன்றத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
  • இந்த விவகாரத்தில் இருவரும் மேஜர் என்பதால் பதிவு திருமணம் செல்லும் என நீதிபதி உத்தரவிட்ட நிலையில், இருவரையும் போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்