எலிக்கும் பிடித்த பணப்பேய்..நிஜ திருடனுக்கே டஃப் கொடுத்த எலி.. கொரிக்காமல் எடுத்து சென்ற காட்சி

x

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பழக்கடையில் எலி ஒன்று பணத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மகேஷ் என்பவரின் பழக்கடையில் தினமும் இரவு நேரத்தில் கல்லாவில் இருந்து பணம் காணாமல் போகியுள்ளது. இதையடுத்து சிசிடிவி யை பொருத்தி கண்காணித்து வந்துள்ளனர். மீண்டும் பணம் காணாமல் போகவே சிசிடிவியை ஆய்வு செய்த போது எலி ஒன்று பணத்தை திருடி செல்வது தெரியவந்தது. பின்னர் பொருட்களை வெளியேற்றி எலி வலையை கண்டறிந்து பார்த்தப்போது இதுவரை திருடு போன பணம் அனைத்தும் எவ்வித சேதமும் இன்றி இருந்துள்ளது. பழக்கடையில் பழங்களை விடுத்து எலி பணத்தை திருடிய சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்