சென்னையை மிரட்டிய மழை - புதிய கார் மீது முறிந்து விழுந்த மரம்

x

சென்னையை மிரட்டிய மழை - புதிய கார் மீது முறிந்து விழுந்த மரம்

சென்னை சூளைமேடு பகுதியில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக வீட்டின் முன் இருந்த மரம் முறிந்து விழுந்ததில் புதிய கார் மற்றும் 3 இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. சென்னை சூளைமேடு காரி தெருவில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக வீட்டின் முன் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. வீட்டின் வாசலிலேயே மரம் விழுந்தால் வீட்டிற்குள் இருந்த நபர்கள் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்புத் துறைக்கு வீட்டின் உரிமையாளர் அளித்த தகவலின் பெயரில் கோயம்பேடு தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு மரத்தை அகற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்