"நெல்லை முபாரக் வீட்டில் ரெய்டு.. பாஜகவின் வன்மம்" - கொதித்துப்போன கருணாஸ்

x

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மீதான என்.ஐ.ஏ சோதனை இஸ்லாமியர்கள் மீதான பாஜக அரசின் வன்மத்தின் வெளிப்பாடு என முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் சேது கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பான சோதனை என்றாலும், இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். முறையாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் விசாரணை, சோதனை என்ற பெயரில் ஓர் பதற்றத்தை பற்றவைப்பதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்