ராணுவ வீரர் மனைவியிடம் அத்துமீறிய ..பாமக ஊராட்சி மன்றத் தலைவர்

x

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையில் ஊராட்சி மன்றத் தலைவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக ராணுவ வீரரின் மனைவி, காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார். ராணுவத்தில் பணியாற்றி வரும் புருஷோத்தமனின் மனைவி ராஜேஸ்வரியிடம் பாமக ஊராட்சி மன்றத் தலைவர் வேணு, தகாத வார்த்தைகளால் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, ராஜேஸ்வரி தனது கணவருக்குத் தகவல் தெரிவித்ததால், அவர் ராஜஸ்தானில் இருந்து மின்னஞ்சல் மூலமாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்