பாகிஸ்தான் மசூதியில் வெடிகுண்டு தாக்குதல்.. பலி எண்ணிக்கை 80-ஐ தாண்டியது
பாகிஸ்தானின் பெஷாவர் மசூதியில் வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 80-ஐ தாண்டியது.
பெஷாவர் நகரில் போலீஸ் குடியிருப்பில் உள்ள மசூதியில் மதியம் தொழுகை முடிந்ததும், பலத்த சத்தத்துடன் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.
மசூதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததையடுத்து, போலீசார் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை தொடங்கினர்.
இந்த பயங்கர தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது.
Next Story