பாகிஸ்தானில் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு - 47 பேர் உடல் சிதறி பலி, 150-க்கும் மேற்பட்டோர் காயம்... இடிந்து விழுந்த மசூதியின் ஒரு பகுதி

x

பாகிஸ்தானின் பெஷாவர் மசூதியில் வெடிகுண்டு தாக்குதலில் 47 பேர் உடல் சிதறி பலியாகினர். 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

பெஷாவர் நகரில் போலீஸ் குடியிருப்பில் உள்ள மசூதியில் மதியம் தொழுகை முடிந்ததும், பலத்த சத்தத்துடன் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.

மசூதியின் ஒரு பகுதி இடிந்து தொழுகைக்காக வந்தவர்கள் மீது விழுந்தது. உடனடியாக போலீசார் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை தொடங்கினர்.

இந்த பயங்கர தாக்குதலில் 47 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

பெஷாவர் நகரில் உள்ள மருத்துவமனைகளில் நெருக்கடிநிலை பிரப்பிக்கப்பட்டு, காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலரது நிலை மோசமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நாட்டை பாதுகாப்பவர்களை குறிவைத்து, பயத்தை ஏற்படுத்த பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்